Translate

Monday 16 April 2012

திருப்பதி லட்டில் தங்கத்தோடு _


  திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரெட்டப்பா(45), என்பவர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்யச் சென் று இருந்தார்.

தரிசனம் முடிந்து அங்கு லட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு ரெட்டப்பா திரும்பினார்.பின்னர் பிரசாதத்தை உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்கினார். 



அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான சுதர்சன ஆச்சாரி,உமாதேவி தம்பதியினருக்கு பிரசாத லட்டு ஒன்றை வழங்கியுள்ளார்.அவர்கள் பூஜை அறையில்அதனை வைத்து மாலை பிரசாதத்தை சாப்பிடுவதற்காக அதனைப் பிய்த்தபோது அதில் சுமார் 2 கிராம் அளவிலான ஒரு தங்கத்தோடு இருந்தது.

இதைக் கண்டு அந்த தம்பதியினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். 

No comments:

Post a Comment