Translate

Monday 9 April 2012

தமிழர் வீடுகளில் புகுந்த சிங்கள ராணுவம்

தமிழர் வீடுகளில் புகுந்த சிங்கள ராணுவம் 

இலங்கையில் திரிகோணமலை , யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி போலீஸ் உதவியுடன் சுமார் 700க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் தமிழர்கள் வீடுகளில் சோதனை நடத்தி சுமார் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 

இது குறித்து ‌போலீஸ் அதிகாரி,   தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுமார் 150 பேர் வரை போர் பயிற்‌சி பெற்று இலங்கைக்கு திரும்பியுள்ளதாக வந்த தகவலை அடுத்து விசாரண‌ை நடத்தியதாக தெரிவித்துளார்.
 
இலங்கையி்ன் இந்த தகவலை அடுத்து  தமிழக அரசும் மத்திய அரசும் கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்‌கு முன்பு இலங்கைக்கு எதிராக ஐ.நா.,சபை கொண்டுவந்த மனித உரிமை மீறல் தீர்மானத் திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததற்கு எதிர்ப்பு‌ தெரிவித்து இத்தகைய நெருக்குதல்கள் தருவதாக இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment