Translate

Monday 23 April 2012

வீட்டினுள் புகுந்த மாணவியிடம் தகாதமுறையில் நடக்க முற்பட்ட படைச் சிப்பாய்



பதிவு மேற்கொள்வதாக தெரிவித்து வீட்டினுள் புகுந்த படைச் சிப்பாய் மாணவியிடம் தகாதமுறையில் நடக்க முற்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக  செய்தியார் தெரிவிக்கின்றார்.
நேற்று  (24-04-2012) காலை 10.30 மணியளவில் வவுனியா வடக்கு நெருங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேலாங்குளம் கிராமத்திலுள்ள வீடுகளில் பதிவுகளை மேற்கொள்வதாக தெரிவித்து வீடு வீடாகச் சென்ற சிறீலங்காப் படைச் சிப்பாய் ஒருவர் தனிமையில் இருந்த மாணவியிடம் முறைகேடாக நடக்க முற்பட்டுள்ளார்.

தந்தையும் தாயும் வேலைக்குச் சென்ற நிலையில், கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை எழுதி விட்டு வீட்டில் இருந்த 16 அகவையுடைய மாணவியிடம் வேலாங்குளம் படைமுகாமைச் சேர்ந்த சிப்பாயே இவ்வாறு தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.
எனினும், மாணவியின் கழுத்தைப் பிடித்ததும் அவர் போட்ட கூக்குரலினால் அயலவர்கள் ஒன்று திரண்டதும் குறித்த சிப்பாய் அவ்விடத்திலிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment