தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்களப் படைகளிற்கு தமிழகத்தில் பயிற்சியளிக்கப்பட்டுவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சி நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

சிங்களக் கொலைவெறிப் படைகளிற்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் வேறு எந்த இடத்திலும் பயிற்சியளிக்கக் கூடாது என்றும் தமிழர்களது மன உணர்வுகளிற்கு மதிப்புக் கொடுக்காது மீண்டும் மீண்டும் இராணுவப்பயிற்சிகளை சிங்களவர்களிற்கு அளித்துவருவதைக் கண்டித்தும் இந்தப் பணிப்புறக்கணிப்பினை திருச்சி வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள். இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஐநூறிற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள ஈடுபட்டுள்ளார்கள்.