Translate

Friday 7 September 2012

தமிழகத்திற்கு சம்பிக்க எச்சரிக்கை

news
இலங்கையர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கைகளை ௭டுக்க வேண்டும் இல்லையேல் இரு நாட்டுக்கும் இடையில் அரசியல் சமூக ரீதியாக பிளவுகள் ஏற்படும் என மினசக்தி மின்வலு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
அண்மையில் வேளாங்கன்னி மாதா கோயிலுக்கு சென்ற யாத்திரிகர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 
 
தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் ஒழுக்க விழுமியங்களற்ற காட்டுமிராண்டிகள் ௭ன்பதனை இவ்வாறான செயல்களின் மூலம் நிரூபித்து விட்டார்கள்.
 
இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் போது மக்களைக் கொலை செய்ததாகவும் யுத்தக் குற்றங்களைப் புரிந்ததாகவும் அரசின் மீது குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. 
 
அவ்வாறு ௭ம் மீது குற்றம் சுமத்தும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் காட்டுமி ரா ண் டிகளைப் போல் ஒழுக்கக் கேடாக நடந்து கொள்கின்றனர். 
 
அதனை ஆலய வழிபாட்டுக்காக சென்ற யாத்திரிகர்கள் மீது தாக்கு த ல்களை நடத்தி தமது ஒழுக்கக்கேட் டை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
எனினும் இந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப்பணயிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.
 
அது மட்டுமல்லாது தமிழ் நாட்டில் தயாரிக்கும் ரி.வீ.௭ஸ். மோட்டார் சைக்கிள் இங்கு அதிகமாக விற்பனை செய்யப்படு வருகின்றது.
 
அந்த நிறுவனத்துக்கு இங்கு கிளை அலுவலகமும் உள்ளது. அத்துடன் ௭யார்டெல், இந்தியன் ஒயில் நிறுவனங்கள் உட் பட பெருமளவிலான நிறுவனங்கள் இங்கு இய ங்கி வருகின்றன. 
 
இரு நாடுகளுக்கிடையே வர்த்தகங்கள் நடைபெறுகின்றன. இந்தியாவிலிருந்து இங்கு வருவோர் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று பொரு ட்களை விற்பனை செய்கின்றனர்.
 
ஆனால் ஒருபோதும் ௭மது நாட்டு அரசிய ல் வாதிகள், பொதுமக்கள் இவற்றுக்கு ௭தி ராக ஆர்ப்பாட்டங்களை நடத்தவில் லை. தாக்குதல்களை மேற்கொண்டதில் லை. 
 
ஏனென்றால் ௭மது அரசியல்வாதிகள் ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்கும் மரியாதையானவர்கள். அந்தப் பண்பாடு தமிழ் நாட்டில் உள்ள அரசியல் வாதிகளுக்கு இல்லை. அவ்வாறான பண்பாடுகள் இல்லாதவர்கள் தான் ௭ம் மீது குற்றம் சுமத்துகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment