Translate

Friday 5 October 2012

ஜனாதிபதி முன்வைத்த காலை பின்​வைக்க மாட்டார் - பசில் பேச்சு


ஜனாதிபதி முன்வைத்த காலை பின்​வைக்க மாட்டார் - பசில் பேச்சுதிவிநெகும சட்ட மூலத்தை ஜனாதிபதி திரும்பப்பெற மாட்டார் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டத்தை மீண்டும் பின்தள்ள மாட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


பத்தரமுல்லையில் இன்று (05) இடம்பெற்ற இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி அதிகாரிகள் சங்க 15வது பிரதிநிதித்துவ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பசில் இவ்வாறு குறிப்பிட்டார். 

உத்தேச திவிநெகும சட்ட மூலத்தின் பிரகாரம் கிராம பகுதிகளில் அபிவிருத்தி அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

அதன்மூலம் அரசசார்பற்ற நிறுவனங்களில் செயற்பாடுகள் இரத்தாகுமென அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment