Translate

Wednesday 3 October 2012

போர் குற்றங்களை சுமத்தும் நோக்கில் முள்ளிவாய்க்காலில் மண்ணை தோண்டி சாட்சியங்களை தேடுகின்றனர் :


போர் குற்றங்களை சுமத்தும் நோக்கில்  முள்ளிவாய்க்காலில் மண்ணை தோண்டி சாட்சியங்களை தேடுகின்றனர் :
இலங்கைக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தும் நோக்கில், அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில், முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு சென்று, மண்ணை தோண்டி சாட்சியங்களை தேடி வருவதாக தெரியவந்துள்ளது.

 
இந்த குழுவினரின் பின்னணியில் நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் நெடியவன் இருப்பதாகவும் இந்த அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பட்டாளர்களில் சில பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதை சர்வதேச சமூகத்திற்கு உறுதிப்படுத்துவதற்காக முள்ளிவாய்க்கால் மற்றும் ஆனந்தபுரம் பிரதேசங்களில் மண் தோண்டப்பட்டு வருவதாகவும் திவயின கூறியுள்ளது. 

No comments:

Post a Comment