Translate

Tuesday 2 October 2012

தமிழரசுக்கட்சியின் தான்தோன்றித் தனங்கள் - சுரேஷ் நேர்காணல்!(ஒலி)

அவர் தமிழ்லீடர் இணையத்திற்கு வழங்கிய முழுமையான நேர்காணல்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலமான சக்தியாக ஒரு வலுவான இயக்கமாக செயற்படவேண்டும் என்பதே கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் விருப்பமாக உள்ளது. கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் பல நடவடிக்கைகள் பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டுவருகின்ற நிலையில் இது குறித்து தமிழ்லீடர் கேள்வி எழுப்பியது.

விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதன்பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேவை இன்று அதிகமாக உள்ளதாகக் கூறும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களுக்கான தீர்வு, மக்களுக்கான உதவி, முன்னாள் போராளிகளின் விடுதலை, நிதிப்பங்கீடு, தமிழ் மக்களின் பலம் உட்பட பல விடயங்கள் குறித்து தமிழ்லீடரிடம் பகிர்ந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக்கட்சியினர் தான்தோன்றித்தனமாக வெளிநாட்டு கிளைகள் திறந்து நிதிச் சேகரிப்பில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

அவர் தமிழ்லீடர் இணையத்திற்கு வழங்கிய முழுமையான நேர்காணல்.



http://tamilleader.c...0-20-33-21.html 

No comments:

Post a Comment