Translate

Wednesday 28 November 2012

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம்! சீற்றத்தில் இலங்கை அரசு!


பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம்! சீற்றத்தில் இலங்கை அரசு!

பிரித்தானிய மண்ணில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வு நடைபெற இருப்பதானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்து வரும் மற்றுமொரு அங்கீகாரமாக பலராலும் கருதப்பட்டு வருவதானது இலங்கை அரசினை  சீற்றங்கொள்ள வைத்துள்ளது.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வினை சீர்குலைப்பதற்கான மறைமுகமாக முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது.
நாளை வியாழக்கிழமை (29-11-2012) பாராளுமன்ற அமர்வின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வான புதிய முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நா.த.அரசாங்கம் அறிவித்துள்ளது.
BRENT TOWN HALL எனும் முகவரிக்கு மாற்றாக 
Zoroastrian Centre, 440 Alexandra Avenue, Rayners Lane, HA2 9TL.
Nearest Tube: Raners Lane
எனும் புதிய முகவரிவரியில் மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை தொடக்க அமர்வு இடம்பெறவிருக்கின்றது.

தொடக்க நாள் அமர்வில் பொதுமக்களையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment