Translate

Monday 21 November 2011

பிரித்தானியாவில் ஒன்றுபட்ட நிகழ்வாக ஒரே இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்.


பிரித்தானியாவில் ஒன்றுபட்ட நிகழ்வாக 
ஒரே இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள். 

பிரித்தானியாவில் ஒன்றுபட்ட நிகழ்வாக மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒரே இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

ExCeL மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்மாற்றப்பட்டு 
SKLPC  "India Gardens",  West End Road, Northolt, Middlesex, UB5 6RE எனும் முகவரியில் அமைந்துள்ள முருகதாசன் நினைவுத் திடலில்  மாபெரும் கூடாரத்தில் ஒன்றுபட்ட நிகழ்வாக ஒரே இடத்தில் நடைபெறவுள்ளது.

காலநிலையை கருத்தில் கொண்டு மக்களின் வசதிகருதி ஒரே நேரத்தில் பத்தாயிரம் மக்கள் ஒன்றாக அமர்ந்து இருக்கக்கூடிய முறையில் மாபெரும் கூடாரம் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ் நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு அருகாமையில் உள்ள நிலக்கீழ் தொடரூந்துகளில் (Tube Station) இருந்து மக்களை நிகழ்வு இடப்பெறும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வாகன ஒழுங்குகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு: www.TNRF.co.uk

No comments:

Post a Comment