Translate

Friday 11 November 2011

இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டது – நோர்வே

இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டது – நோர்வே
இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டது – நோர்வே : தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததாக நோர்வே அறிவித்துள்ளது. இலங்கை சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வே இன்று விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் சமாதான முனைப்புக்கள் எதனால் தோல்வியடைந்த என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டுமென இந்தியா பெரிதும் விரும்பியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் மீது அனுதாபம் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நோர்வே மத்தியஸ்தத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் தோல்வியில் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர், தமிழர் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்ட போதிலும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை.
இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்தியா எவ்வித ஆர்வமும் காட்டவில்லை என நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைப் படையினர் ராடார்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை இந்திய மத்திய அரசாங்கம் வழங்கியிருந்தது.
நோர்வேயுடனான தனிப்பட்ட சந்திப்புக்களின் போது புலிகளுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்திற்கு நேரடியாக இந்தியா உதவிகளை வழங்காத போதிலும் வேறும் நாடுகளிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் புலிகள் மீதான எதிர்ப்பலை இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் பலமாக அமைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1992ம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக இந்தியா அறிவித்திருந்தது.
2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது ராஜீவின் மனைவி சோனியா கட்சியின் முக்கிய பொறுப்பை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் நோர்வே அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முனைப்புக்கள் குறித்து 202 பக்கங்களில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதனை இலங்கையும் இந்தியாவும் அதிகமாக விரும்பவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காங்கிரஸ் தோல்வியைத் தழுவியிருந்தால் இலங்கைக்கு அது தலையிடியாக அமைந்திருக்கும் எனவும் இந்திய தேர்தல் குறித்து இலங்கை கூடுதல் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாரதீய ஜனதா கட்சி தேர்தலில் வெற்றியீட்டினால் புலிகளை காப்பற்ற முடியும் என வை.கோ கருதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : ஐயுNளு

No comments:

Post a Comment