Translate

Wednesday 29 February 2012

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டோரில் அதிகமானோர் தமிழர்கள்


  பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு இன்று நாடுகடத்தப்பட்ட 52 பேரில் 28 தமிழர்களும், 10 முஸ்லிம்களும், 14 சிங்களவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 44 பேர் ஆண்கள் என்பதுடன், 8 பேர் பெண்கள் ஆவர். 



இவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் ஏ விவி 8842 என்ற விசேட விமானம் மூலமே இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்கென இவர்களோடு 122 பிரித்தானிய பொலிஸாரும் இங்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. _

No comments:

Post a Comment