இறுதி கட்ட போருக்கு பின் இலங்கையில் உள்ள தமிழர்கள் படும் துயரங்களும் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளது.
இது குறித்து ஒரு சர்வதேச அமைப்பு நெஞ்சை பிழியும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், இறுதி கட்ட போருக்கு பின்பும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கை தரம் இயல்பு நிலைக்கு வரவில்லை. இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


அங்குள்ள பெண்கள் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர். சிங்கள ராணுவத்தினரின் காமவெறிக்கு பலியாக் கப்படுகின்றனர்.

அதில் சிறுமிகளும் அடங்கும் என்பது கொடுமையிலும் கொடுமை. காரணமே இன்றி விசாரணை என்ற பெயரில் 14 ஆயிரம் ஈழ தமிழர்கள் சிங்கள ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

அவர்கள் எங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன? உயிருடன் இருக்கிறார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு இன்று வரை விடை தெரியவில்லை.

தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள ராணுவத்தினர் சூதாட்ட விடுதிகளையும், மதுபான விடுதிகளையும் திறந்து வைத்து அட்டூழியம் செய்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி நக்கீரன்