பல வெள்ளை வான் கடத்தலில் சம்பந்தப்பட்டஈபிடிபி ரகு கழுத்து வெட்டிக் கொலை: புலிகள் கடிதம் அருகிலாம் !

மேற்படி ரகு 15 � 20 வருடங்களாக ஈ.பி.டி.பி உறுப்பினராக இருந்தவர் எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இவர் மறைந்திருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இவர் இராணுவ உளவாளியாக செயற்பட்டு வந்ததும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொலையாளிகள் கவனத்தை திசை திருப்ப புலிகளின் பெயரை ஒரு கடதாசியில் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது. ரகு என்று அழைக்கப்படும் இந் நபர் பல வெள்ளை வான் கடத்தலில் சம்பந்தப்பட்டவர் என்றும், இவர்கள் போன்ற சிலரை அரசாங்கம் தற்போது கொலைசெய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சில மேற்குலகத்தின் அழுத்தங்களைச் சமாளிக்கவே, இலங்கைப் இரகசியப் பொலிசார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மேலும் சில செய்திகள் கசிந்துள்ளது.
No comments:
Post a Comment