Translate

Monday 26 March 2012

அம்பாறைக்குள் ஊடுருவிய சுரேஸ் பிரேமச்சந்திரன்!


அம்பாறைக்குள் ஊடுருவிய சுரேஸ் பிரேமச்சந்திரன்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான குழு ஒன்று அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்துக்கு நேற்று சென்று உள்ளது.

சுரேஸ் பிரேமச்சந்திரன், வினோநோகராதலிங்கம், கல்முனை மாநகர உறுப்பினர் ஜெயகுமார் ஆகியோர் மக்கள் சந்திப்பு ஒன்றையும் இங்கு நடத்தி இருக்கின்றார்கள்.

பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு ஜெனிவா மாநாடு தொடர்பாக விளக்கங்கள் கொடுத்து இருக்கின்றனர்.

கல்முனை மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஏராளமான அநீதிகள் இழைக்கப்படுகின்றன என்று கோஷமிட்டார்கள்.

கல்முனைக்கு மாத்திரம் அன்றி அம்பாறையின் பல இடங்களுக்கும் சென்று இருக்கின்றனர்.

No comments:

Post a Comment