Translate

Saturday 17 March 2012

ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி ஆகியவற்றுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு


ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைக பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கத்தோலிக்க மதகுரு ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்ட் ஏசியா என்னும் அரச சார்பற்ற நிறுவனம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
மன்னார் மாவட்ட பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையினால் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென போர்ட் ஏசியா கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment