Translate

Monday 23 April 2012

விடுதலைப் புலிகள் அச்சம் காரணமாக கிழக்கில் வரலாறு காணாத தேடுதல் !


விடுதலைப் புலிகள் அச்சம்
கிழக்கில் நேற்றைய தினம்(23) வரலாறு காணத தேடுதல் நடவடிக்கை ஒன்றை இலங்கை இராணுவத்தின் இரகசிய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடத்தியுள்ளதாககிழக்கில் உள்ள பெரும்பாலான காட்டுப் பகுதிகளையும் அதனை அண்டிய கிராமங்களையும், சுற்றிவளைத்த சிறப்புப்படையினர் இத்தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர் என்று மேலும் அறியப்படுகிறது. இந்தியாவில் இருந்து விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் சிலர் ஊடுருவியுள்ளதாக, தடுப்புக்காவலில் உள்ள புலிகள் தெரிவித்ததாக இராணுவம் கூறியுள்ளது. இதனை அடுத்தே இத்தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

காடுகளோடு அண்டியுள்ள கிராமங்களை இரவுவேளைகளில், அணுகிய இராணுவத்தினர் வீட்டை திறந்து தேடுதல் நடத்தியுள்ளனர். போதாக்குறைக்கு பெண்களை துன்புறுத்தி புலிகள் தொடர்பான கேள்விகளைக் கேட்டுள்ளனர்

No comments:

Post a Comment