Translate

Monday 16 April 2012

இலங்கைத் தமிழர் மீது திமுகவுக்கு அக்கறையில்லை: நாராயணசாமி


சென்னை, ஏப்.16: திமுகவுக்கு இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறையில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.
நாராயணசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
தில்லியில் இருந்து இலங்கைக்குச் செல்லும் நல்லெண்ண குழுவில் திமுக சார்பில் டிகேஎஸ். இளங்கோவன் எம்பி செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. டி.கே.எஸ்.இளங்கோவனும் இந்த பயணம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் இலங்கை செல்லும் நல்லெண்ண குழுவில் இருந்து திமுக இடம் பெறாது என்று அறிவித்தது வருத்தம் அளிக்கிறது.  இந்த செயல் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மீது அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது என நாராயணசாமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment