Translate

Monday 23 April 2012

எல்லை மீறி செயல்பட்டால் ”கன்னத்தில் அறைவேன்”டிலான் பெரேராவிற்கு மகிந்த!


எல்லை மீறி செயல்பட்டால் ”கன்னத்தில் அறைவேன்” என அமைச்சர் டிலான் பெரேராவிற்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆவேசமாக எச்சரித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட அமைச்சர் லக்ஸ்மன் செனவிரத்னவின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் டிலான் பெரேரா மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அமைச்சர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அமைச்சர் டிலான் பெரேராவை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, சம்பவம் தொடர்பாக அமைச்சர் கடுமையாக எச்சரித்து, ”தலைகால் தெரியாமல் குடித்துவிட்டு மீண்டும் இவ்வாறு செயற்பட்டால் கன்னத்தில் அரைவேன்” என ஜனாதிபதி ஆவேசத்துடன் எச்சரித்துள்ளார்.
அமைச்சர் லக்ஸ்மன் செனவிரத்னவின் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென அமைச்சர் டிலான் பெரேரா இதன்போது தெளிவுபடுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தொடர்பைத் துண்டித்துள்ளார்.

No comments:

Post a Comment