Translate

Tuesday 17 April 2012

சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் பயணத்தை மட்டுப்படுத்த வேண்டாம் !


The call of time is to send thoughts of peace and power to the world.

சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் பயணத்தை மட்டுப்படுத்த வேண்டாம் !
சிறிலங்கா சென்றுள்ள இந்தியக்குழுவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை 

பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் தமது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் தங்கள் பயணத்தை மட்டுப்படுத்தாமல் இந்தக் குழுவில் பங்குபற்ற மறுத்த கட்சிகள் தெரிவித்த நியாயமான காரணங்களை புரிந்துகொண்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நேரடியாக சந்திப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அங்கு இடம்பெற்ற கொடிய இனவழிப்பு போரின் சுவடுகளை நேரில் பார்வையிட்டு உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல், வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment