Translate

Tuesday 8 May 2012

இந்தியா, அமெரிக்கா விரித்துள்ள சதிவலையில் இலங்கை


அமெரிக்க அயலுறவு செயலர் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு பய்ணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியா, அமெரிக்கா விரித்துள்ள சதிவலையில் இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது என்று இலங்கை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அயலுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில், இலங்கையிலிருந்தும் தூதுக்குழுவொன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறது.
இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சீன நட்புறவு கொள்கையிலிருந்து முழுமையாக பிரித்தெடுக்கும் படலம் முற்றுப்பெறவுள்ளது.
ஏற்கனவே சீனாவுடனான நட்புறவிலிருந்து இலங்கை அரசாங்கம் மெதுமெதுவாக விலகி வருகிறது.
இதன் பின்னர் நிச்சயமாக அமெரிக்காவின் இராணுவ முகாம் இலங்கையில் நிறுவப்படும்.
இதன் பின்னர் சரத் பொன்சேகா விடுதலைக்கான காய்நகர்த்தல்களை அமெரிக்கா மேற்கொள்வதோடு அதற்கான அழுத்தத்தை ஜனாதிபதியின் மீது பிரயோகிக்கும்.
சிங்கள, பௌத்தர் என்ற முத்திரையின் கீழ் சரத் பொன்சேகாவை விடுவித்து அதன் பின்னர் பொன்சேகாவை ஆட்சிக்கு கொண்டு வந்து வடக்கு கிழக்கில் தமிழ்மக்களை ஒழிக்கும் செயற்பாடுகளை நிறைவேற்றி இலங்கையை அமெரிக்கா இரண்டாகப் பிரிக்கும்.
அச்சதித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை இந்தியாவுடன் மேற்கொள்ளவே ஹிலாரி கிளின்டன் புதுடில்லி வந்துள்ளாரென்றும் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

No comments:

Post a Comment