
�தாய்த்தமிழகம்தான் ஈழத்தமிழர்களைப் பாதுகாத்துத் துன்பத்தில் இருந்து விடுவிக்க முடியும் என்றும், ஈழத்தின் விடியல் தமிழ்நாட்டின் கைகளில்தான் இருக்கின்றது� என்றும், ஸ்ரீதரன் நம்பிக்கையோடு கூறினார்.
வைகோ கூறியதாவது:
சுதந்திரத் தமிழ் ஈழ தேசம்தான் நமது இலக்கு. ஆனால், சிங்கள இனவாத அரசு, ஆறாவது சட்டத் திருத்தத்தைக் கொடுவாளாகப் பயன்படுத்தி, இலங்கைத் தீவில் சுதந்திர ஈழக் குரல் எழுப்பும் அரசியல் கட்சிகளை நசுக்கவும், நாசமாக்கவும் திட்டமிட்டு உள்ளதால், தீவில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் வெளிப்படையாகத் தனி ஈழக் குரல் கொடுக்க முடியாத தற்போதைய நிலையை, நன்கு அறிவோம்.
ஈழத்தமிழர்கள் பிரிவினை கேட்கவில்லை. இழந்த சுதந்திரத்தையே மீண்டும் கேட்கின்றனர். இறையாண்மை உள்ள சுதந்திர தேசமாக அரசோச்சி வாழ்ந்த தங்கள் தாயகம், சிங்களவரின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடப்பதால், அந்த விலங்குகளை உடைத்து, அந்நியர் ஆக்கிரமிப்பை அகற்றி, இழந்த சுதந்திரத்தை மீண்டும் அடைவதற்கான, ஈழத்தமிழரின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை, அனைத்து உலக நாடுகள் நிராகரிக்கவோ, உதாசீனம் செய்யவோ முடியாது. தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களரை வெளியேற்றவும், சுதந்திர ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா.மன்றம் நடத்தவும், அதில் அனைத்து உலக நாடுகளில் ஆங்காங்கு வாழும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாக்கு அளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுமான கோரிக்கையை, அனைத்து உலக மக்கள் நீதியும் நியாயமுமாகக் கருதி ஏற்கவே செய்வார்கள்.
அதுவே ஈழத்தமிழர்களின் இலக்கு; தாய்த் தமிழகத்தின் இலக்கு; தரணி வாழ் தமிழர்களின் இலக்கு. அந்த இலக்கினை உறுதியாக அடைவோம். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்ந்திடச் செய்வோம்� என்று வைகோ கூறினார்.
http://thaaitamil.co...-இலங்கை-நாடாளு/
No comments:
Post a Comment