Translate

Thursday 26 July 2012

லண்டனில் நாளை பாரிய போராட்டம் என அறிவிப்பு !

ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்துகொள்ள நாளை லண்டன் வரும் மகிந்தருக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடத்த தமிழர்கள் திட்டம் தீட்டியுள்ளனர் என அறியப்படுகிறது. பிரித்தானியாவில் இயங்கும் மக்கள் அமைப்பான TCC இப் போராட்டத்துக்கான அனுமதியைப் பொலிசாரிடம் இருந்து பெற்றுள்ளது.



இதனை அடுத்து நாளை மதியம் முதல் இரவுவரை இப் போராட்டம் நடைபெறும் என்று இவ்வமைப்பு அறியத்தருகிறது. மாலை 5 மணிமுதல் 9மணிவரை ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறுவதால், இதில் கலந்துகொள்ள மகிந்தரும் அவரது துணைவியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் லண்டன் வருகின்றார்கள் என இலங்கை அரசின் ஊடக்ப் பேச்சாளர் பந்துல தெரிவித்துள்ளதாக, லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபெண்டன் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment