Translate

Tuesday 25 September 2012

600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரிட்டன் தீர்மானம்


600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரிட்டன் தீர்மானம்
பிரிட்டனில் தஞ்சமடைந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600 இலங்கையரை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பிரித்தானியாவில் தஞ்சமடைந்திருந்தவர்களே இவ்வாறு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பிஅனுப்பப்படவுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
தற்போது இலங்கையில் சமாதான சூழ்நிலை காணப்படுவதையடுத்தே இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் இவர்கள் அனைவரையும் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கõன ஏற்பாடுகளை பிரித்தானிய அரசு செய்து வருவதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment