Translate

Wednesday 3 October 2012

2012 ஆம் ஆண்டு தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுக்கான மக்கள் சந்திப்பு!


2012 ஆம் ஆண்டு தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுக்கான மக்கள் சந்திப்பு!

கடந்த பல வருடங்களாக பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாளை நடாத்திவரும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் இம்முறையும் மிகவும் சிறப்பாகவும், மக்களின் ஒன்றிணைந்த எழுச்சியோடும் மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகளை முன்னகர்த்தி வருகிறது.

அதன் ஒரு வடிவமாகவே மக்களை அழைத்து பொது மக்கள் சந்திப்பு ஒன்றை நடாத்தி அனைவரது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் உள்வாங்கி இவ்வருட (2012) தேசிய நினைவெழுச்சி நாளை சிறப்புற நடாத்த உத்தேசித்துள்ளது.

இதற்கமைய 2012 இற்கான தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக ஒன்றிணைந்த தமிழர்களின் எழுச்சியையும், பலத்தையும் மீண்டும் சர்வதேச அரங்கில் எடுத்துக்காட்டி எமது தாயக விடுதலைக்கான செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான வெளிப்படையான மக்கள் சந்திப்பு ஒன்று தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் (TNRF) பிரித்தானியாவில் உள்ள வடமேற்கு லண்டன் Nower Hill High School. George V Avenue. Pinner. HA55RP எனும் இடத்தில்  ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் மாலை 7:00 மணிவரை  ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. 

எனவே இவ் முக்கிய சந்திப்பில் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்புக்களும், ஆலய நிர்வாகிகள், ஊர்ச்சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்கங்கள், தமிழ் இளையோர், தமிழ் பாடசாலைகள் , விளையாட்டுக் கழகங்கள், வர்த்தகர்கள், மற்றும் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளையும் தவறாது வந்து ஆக்கபூர்வமான கருத்துக்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி மண்மீட்புப் போரில் வீரகாவியமாகி வித்தாக வீழ்ந்த மாவீரர்களை நினைவு கொள்ளும் புனித நாளான தேசிய நினைவெழுச்சி நாளை சிறப்புற நடாத்த உதவுமாறு தாழ்மையுடனும், அன்புரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.


நன்றி

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம்
தலைவி
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்
ஐக்கிய இராச்சியம்

No comments:

Post a Comment