Translate

Wednesday 3 October 2012

பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்துடன் தொடர்புடையவர் துணை இராணுவத்தினரால் கடத்திக் கொலை :


பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்துடன் தொடர்புடையவர் துணை இராணுவத்தினரால் கடத்திக் கொலை :
கடந்த 27 ஆம் திகதி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும், தற்போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும், ரேல்பாரே சஞ்ஜீவ என அழைக்கப்படும் மிலங்க பிரபாத் என்பவர் கடந்த 30 ஆம் திகதி அரசாங்கத்தின் துணை இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிய கிடைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 
மாணவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியானதை அடுத்து, சாட்சியை உயிருடன் விடுவது ஆபத்தானது என அறிந்து கொண்ட அரசாங்கம், சஞ்ஜீவின் தலைவரான கராத்தே தம்மிக்கவை அனுப்பி வைத்த இடத்திற்கே அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளது. சஞ்ஜீவ காணாமல் போனமை தொடர்பான அவரது உறவினர் ஒருவர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். 

No comments:

Post a Comment