Translate

Friday 12 October 2012

யாழில் எங்கு வேண்டுமானாலும் இராணுவ முகாம் அமைக்கலாம்…!! – யாழ்-மேயர் யோகேஸ்வரி


யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் எங்கு வேண்டுமானாலும் முகாம் அமைக்க முடியும். அவர்களை யாரும் தடுத்து விட முடியாது. என யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

முகாம்களை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்  இராணுவத்தினர் சிங்கள மகா வித்தியாலயத்தின் காணிகளை ஆக்கிரமித்து பாரிய படை முகாம் அமைக்கும் பணியை கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றது.
அரியாலை கொழும்புத்துறை குருநகர் ஆகிய பகுதிகளிலுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்கவே யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தில் இராணுவம் புதிய முகாம் அமைத்துவருவதாக புதிய கதையை விட்டிருக்கிறது.
இலங்கையில், இராணுவம் விரும்பினால் அரச காணிகளில் எந்த இடத்திலும் முகாம் அமைக்கலாம்! இதனை யாரும் எதுவும் செய்ய முடியாது என யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment