இலங்கை இராணுவத்திற்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தி, குற்றவாளியாக முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரித்தானிய உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து ரகசியமான முறையில் செயற்பட்டு வரும் அரசசார்பற்ற நிறுவனங்கள் குறித்து சிறீலங்கா அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடுத்த மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத் தொடர்பில் சமர்பிப்பதற்காக பொய்யான தகவல்கள் பலவற்றை உலகத் தமிழர் பேரவைக்கு அனுப்பியுள்ளதாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான சில நாடுகள் இந்த வேலைத்திட்டத்தின் பின்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதேவேளை உலக தமிழர் பேரவையில் லண்டனில் இருந்து அச்சுறுத்தும் வகையிலான அறிக்கையை வெளியிட்டு, இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மீண்டும் ஒரு யோசனை கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளதாக திவயின கூறியுள்ளது.