Translate

Friday 23 November 2012

13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாது அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுகின்றனர்: ரெலோ ஜனா


13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாது அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுகின்றனர்ரெலோ ஜனா

Posted by www.telo.org on Thursday, November 22, 2012
http://telo.org/wp-content/uploads/2012/11/Jana-1-298x300.jpg13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாதுஅதனுடன் விளையாடும்எல்லாவெல மேத்தானந்ததேரர்விமல் வீரவன்சசம்பிக்க ரணவக்க ஆகியோர் அதன் பயனை அனுபவிப்பதுவெகுதொலைவில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தமிழீழ விடுதலைஇயக்கத் (ரெலோ)தின் கோ.கருணாகரம் ( ஜனாதெரிவித்துள்ளார்.13ஆவது திருத்தச் சட்டத்தினை அரசியலமைப்பிலிருந்துஅகற்றுவது தொடர்பாக பேசப்பட்டு வரும் விடயங்கள் குறித்தும் முரண்பாடுகள் குறித்தும் வெளியிட்டுள்ளஅறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா சோசலிச குடியரசின் அரசியலமைப்பு என்பது 13ஆவது அரசியல் திருத்தத்தையும் உள்ளடக்கியதே என்பதைப்புரியாததெரியாதஅரசியல்வாதிகள்அமைச்சர்கள் சிலரது கருத்துக்களையும் பார்க்கும் போது அவ்வேளை நாம்மௌனமாக இருப்பதுகூட அவர்களது கருத்துக்களை நாமும் ஆமோதித்தது போல ஆகிவிடும்.13ஆவது திருத்தம் இலங்கைஅரசியலமைப்பில் பிரிக்கப்பட முடியாத பகுதி என்பதுடன்இன்றைய பாராளுமன்றத்தில் பிரதேச சபைகள்மாகாண சபைகள்என்பவற்றில் அங்கத்தவர்கள்பிரதிநிதிகள் யாவரும் இலங்கை அரசியலமைப்பினை பேணப் பாதுகாப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்தவர்கள்.அவர்களுள் எல்லாவெல மேத்தானந்ததேரவிமல் வீரவன்சசம்பிக்க ரணவக்க ஆகியோரும்உள்ளடக்கம்இவர்களும் இவர்களது கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரும் 13ஆவது திருத்தம் உள்ளடக்கப்பட்டஅரசியலமைப்பிற்கு விசுவாசமாகவும் பேணிப் பாதுகாப்பதாகவும் சத்தியப் பிரமாணம் செய்தவர்களே.இவர்களதுவிமர்சனங்கள் அரசியலமைப்பை மீறுவதாக அதுவும் அப்பட்டமாக மீறுவதாகவே காணப்படுகின்றதுநமது நாட்டின் நீதி,நிருவாகஅரசியலமைப்புச் சட்டங்களின் படி அரசியலமைப்பை மீறவும் அதுவும் பேணிப்பாதுகாப்பதாக பிரமாணம் எடுத்துக்கொண்ட அரசியலமைப்புக்கு எதிராக விமர்சிக்க இந்த இலங்கைத் திருநாட்டில் உரிமையுள்ள பிரசைகள் எல்லாவெலமேத்தானந்த தேரவும்விமல் வீரவன்சவும்சம்பிக்க ரணவக்கவும் இன்னும் ஒரிருவர் மட்டும் தான்.இவர்கள் ஏதோ ஒருவகையில் இவ்வாறு நடந்து கொள்வற்காக உச்ச அதிகாரத்தினால் தட்டிக் கொடுத்து வளர்க்கப்படுவதாக இலங்கை அரசியல்போக்கினை அவதானிக்கும் போது உணர முடிகின்றது.13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாதுஅதனுடன்விளையாடும் இவர்கள் அதன் பயனையும் அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லைதாடி வளர்த்துமீசை வைத்தால்மட்டுமோ அல்லது மொட்டை அடித்து காவியுடுத்தால் மட்டுமோ இலங்கை அரசியலில் தொடர்ந்து நீடிக்க முடியாது.13ஆவதுதிருத்தம் தொடர்பாக சிங்களம் தொடங்கி வைத்த விமர்சனம் அவர்களுக்கு எதிர்மறையாக மீண்டுமொரு சர்வதேசஆதரவினை தமிழ்த் தேசியத்துக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.மட்டுமல்ல தமிழ் தேசியத்துக்கு அவர்களது விமர்சனம்பலத்தையும் சேர்த்துள்ளது. 13ஆவது திருத்தம் தொடர்பான பேரினவாத விமர்சனத்தின் பின்பும் இந்நாள் அமைச்சர்,பிரதியமைச்சர்களான முன்னாள் போராளிகள் கருத்துக்களும் நடத்தைகளும் தான நமக்கு கோடரிக்காம்பினைஞாபகப்படுத்துகின்றன.13ஆவது திருத்தத்தின் மூலமான அதிகாரங்களைக் கையாள்வது தொடர்பாக இந்த முன்னாள்போராளிகள் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை என்னஇருந்த அதிகாரங்களையும் மத்திய அரசுக்கு பாராதீனப்படுத்தஉதவியதேகாணிபொலிஸ் அதிகாரங்கள் இதுவரை கனவிலும் அமுல் நடத்தப்படவில்லைஇதைவிடகல்விசுகாதாரம்தொடர்பான மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் மத்திய அரசால் மறைமுகமாகப் பறிக்கப்பட்டு பலவருடங்களாகிவிட்டது.பிரதேச அபிவிருத்தி தொடர்பாக மாகாண சபையின் கட்டுப்பாடும் திவிநெகும மூலம் அம்போகஆகப்போகின்றதுஎல்லாவற்றிற்கும் மேலாக மத்திய அரசின் விவேகமற்ற போக்குக்குஅரசியலமைப்புக்கு முரணானபோக்குக்கு கடிவாளம் இட்டு வந்த நீதித்துறையும் கூட இன்று அதிகாரம் இழந்து தாழ் வணங்கி தலை தாழவைக்கும்நிலைமைக்கு ஏற்பாடாகி உள்ளது.இவ்வளவும் கைகட்டி வாய் பொத்தி வஞ்சகப் புகழ்ச்சி செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் நம் முன்னாள் போராளிகள்இது மாத்திரமல்ல வட கிழக்கில் சிவில் நிர்வாகத்துக்கு மாறாக இராணுவநிருவாகத்துக்கு ஒத்து ஊதுவது மூலம் 13ஆவது திருத்தத்தின் மூச்சுக் குழாயையும் நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள்இவர்கள்.தமது செயற்பாட்டிற்கு இவர்கள் கற்பிக்கும் நியாயம் வேறுஆனால் நாம் சபிக்கப்பட்டவர்களாகிவிட்டோம்.பேரினவாதத்தினாலும் இவ் இனத்தின் கோடாரிக் காம்புகளாலும் நாம் நமது உரிமைகள் இழக்க வைக்கப்பட்டுள்ளோம் இதுநமது சாபக்கேடுமட்டுமல்லநாட்டின் சாபக்கேடும் கூட.நாட்டின் நல்லாட்சி என்பது அரசியலமைப்புக்கு உட்பட்டதாக அமையவேண்டும்மாறிவரும் சர்வதேச களநிலவரத்தை நமக்கேற்ப மாற்றி 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் நம் தலைவிதியைதீர்மானிக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம்என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment