Translate

Friday 23 November 2012

பெண்களை வைத்தியசாலையில் வைத்து கற்பழித்த இராணுவம்: அதிர்ச்சி ஆதாரம் ! (video in)

பெண்களை வைத்தியசாலையில் வைத்து கற்பழித்த இராணுவம்: அதிர்ச்சி ஆதாரம் ! (video in)
30.7.11

இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனாண்டோ ஏன்பவர் தறோது ஒரு வெளிநட்டில் சரணடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிற்து. இறுதி நேரத்தில் நடந்த போரில் இரணுவம் செய்த அட்டூளியங்களை அவர் புட்டுப் புட்டு வைக்கிறர். இராணுவத்தின் தேசிய அடையள அட்டையோடு தன்னை நிரூபிக்கும் அவர், சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சிக்கு முகம் மறைக்கப்பட்ட நிலையில் நேர்கணல் ஒன்றையும் வழங்கியிருந்தார். காயப்பட்டு வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்கள் பலரை இலங்கை இராணுவம் கற்பழித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தான் சொந்தக் கண்களால் கண்டதாகக் கூறும் இவர் புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம் மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் தெரிவித்துள்ளார்.


போரில் ஈடுபட்ட 58 வது படைப்பிரிவில் உள்ள படையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்ததாகவும், பெண்களைக் கெடுத்து வல்லுறவில் ஈடுபட்டது மட்டுமல்லாது, அவர்களின் மார்பகங்களை வெட்டி எறிந்ததாகவும், பல சிறுவர்களைச் சுட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். காட்டு மிராண்டிகள் பொலச் செயல்பட்ட இவர்கள் காணும் இடத்தில் பெற்றொர்களுக்கு முன்னர் அவர்களின் பிள்ளைகளிக் கற்பழித்ததாகவும் தெரிவித்துள்ளர். பல இடங்களில் கணப்பட்ட உடலங்களில் தலை துண்டிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான சரியான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பல நூற்றுக்கணக்கான உடலங்கள் தலையின்றி முண்டமாக நிலத்தில் கிடந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதியாகப் புலிகள் 1 கிலேமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டவேளை, 58 வது படைபிரிவின் கட்டளைத் தளபதி ஷர்வேந்திர சில்வாவுடன் தொடர்புகோண்ட கோத்தபாய, அந்தச் சின்னத் துண்டு இடத்தைப் பிடிக்க என்னவேண்டும் என்றாலும் செய்யுங்கள் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சரணடையும் புலிகளின் உறுப்பினர்களில் எவர் எவரை இராணுவம் சுடவேண்டும் என்பதன் பட்டியல் கூட கோத்தபாயவால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிற்து. புலிகளின் சில சிரேஷ்ட தலைவர்களின் புதுத் தோற்றப் படங்களும் 58 வது படைப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. போரில் சுமார் 50,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த பெனாண்டோ என்ற அதிகாரி, பலரது உடலங்களை அடகம் செய்ய முடியாத இராணுவத்தினர், அதன் மேல் மண்போட்டு மூடியதை தான் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிணங்களை அப்படியே நிலத்தில்போட்டு, அதன்மேல் புள்டோசர் கொண்டு மண்னை வாரி, அணைபோலப் போட்டு மூடியதாகவும் தெரிவித்த அவர், அவ்விடமே பிண வாடையோடு இருந்தாகவும். அவ்விடத்துக்கு யாரும் செல்லமுடியாத அளவு பிண வாடை காணப்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடைவது மகிந்தருக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இருந்தாலும் கோத்தபாய உத்தரவின் பேரில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதகவும் அவர் தெரிவித்துள்ளார். அக் கால கட்டத்தில் எவரையும் சுடும் அதிகாரம் தமக்கு இருப்பதா இலங்கை இராணுவம் எண்ணி காட்டுமிராண்டித்தனமகச் செயல்பட்டதாக சொல்லியுள்ள அவர், இரணுவம் ஒரு மனிதநேயம் அற்ற காட்டுவாசிகள் போலச் செயல்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். இவரது பதிவுகள் ஆங்கிலத்தில் பகுதி 1 மற்றும் பகுதி 2 என வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment