நெடியவன் கைதுசெய்யப்பட்டதாகப் புரளி: விசாரணை நடைபெற்றதாகத் தகவல் !
நோர்வேயில் வசித்துவரும் நெடியவன் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர் தடுப்புக்கவலில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் கைதுசெய்யப்படவில்லை என்றும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் அதிர்வு இணையத்துக்கு நம்பகரமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. நோர்வே நாட்டில், சிறுவர் பயிலும் பள்ளியில் வேலைசெய்துவரும் நெடியவனை புலிகளின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவர் என்றும், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் கடந்தகாலங்களில் திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. அவரைக் கைதுசெய்யவேண்டும் என்றும், இலங்கைக்கு நாடு கடத்தவேண்டும் என இலங்கை அரசு கோரிவந்தது யாவரும் அறிந்ததே........... read more
No comments:
Post a Comment