Translate

Wednesday 25 May 2011

பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டும்: கரு ஜயசூரிய _

  பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படக் கூடுமெனவும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறைகள் மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாடுகளினால் பிரயோகிக்கப்படக் கூடிய அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment