Translate

Thursday 26 May 2011

ப.நடேசனை சுடச் சொன்னர் கோத்தபாய: இதனை நேரில் கேட்ட பிரசன்ன தப்பியோட்டம் !

சரணடைய வரும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு தான் கூறிய விடயம் ஊடகவியலாளர் பிரசன்ன ஊடாகவே சரத் பொன்சேகாவிற்கு தெரியவந்ததை அறிந்து கொண்ட கோதபாய ராஜபக்ஷ பிரசன்னாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் நாட்டை விட்டு தப்பி தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார். 


அமெரிக்க தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் றொபட் ஓ பிளேக்கின் உதவியுடன் இவர் நேபாளத்திற்கு சென்றுள்ளார் என்று ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கிருந்து பின்னர் சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் பிரசன்ன. இவருடன் ரூபவாஹினி செய்தி ஆசிரியர் காமினியும் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். இவ்விருவருக்கும் அரசியல் தஞ்சம் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.................. read more

No comments:

Post a Comment