Translate

Wednesday 25 May 2011

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் பாரிய இராணுவ முகாம்!

வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைப்பதற்கான கட்டடப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் விதைக்கப்பட்ட 800 மாவீரர்களின் கல்லறைகள் அழிக்கப்பட்டு இந்த முகாம் அமைக்கப்படுவதாக அவர்களின் உறவினர்கள்,  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கவலையுடன் முறையிட்டுள்ளனர்.


தமது உடன் பிறப்புக்கள் புதைக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த நினைவுக்கல்லறைகள் அவர்களது உடல்கள் சிதைக்கப்படுவது வேதனையளிப்பதாக அந்த மக்கள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவித்தனர்.
இத்தகைய செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment