Translate

Thursday 28 July 2011

மாவீரர் நாள் - 2011 நிகழ்வு ஏற்பாட்டுக் குழு - பிரான்ஸ்

மாவீரர் நாள் - 2011 நிகழ்வு ஏற்பாட்டுக் குழு - பிரான்ஸ் 
எமது விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மகத்தான எம் மாவீரர் செல்வங்களின் தியாகங்களை போற்றிப் பூசிக்கின்ற புனிதமான அந்த நாளை சிறப்புற நடாத்துவதற்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் ஒன்றுகூடி மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு ஒன்றினை உருவாக்கியுள்ளனர். சமூகப் பிரதிநிதிகள், தமிழ் அமைப்புக்கள், மற்றும் நீண்டகால தேசியச் செயற்பாட்டாளர்கள், மாவீரர் குடும்ப அங்கத்தவர்கள், சட்டவல்லுனர்கள் போன்றோர்களை உள்ளடக்கியதாக இவ் ஏற்பாட்டுக் குழுவும், அதன் ஆதரவுக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்பாட்டுக் குழு



1. திரு. றொனி மருசலின் ( முன்னால் தமிழ்ச் சோலை பொருப்பாளர், )
2. திரு. பரராசா குமாரசாமி ( பிரான்ஸ் தமிழர் கலைத்துறை செயற்பாட்டாளர். )
3. திரு. செல்லையா ஜெயச்சந்திரன் ( தேசியச் செயற்பாட்டாளர். )
4. செல்வி. பிரியதர்சினி ( மாவீரர் குடும்பம், )
5. திரு. ஜோர்ஜ் ஜெயராஜன் ( மாவீரர் குடும்பம், )
6. திரு. எஸ். என். ஜே. அன்ரனிப்பிள்ளை ( விளையாட்டுத்துறை, )
7. திருமதி. நாகபூசணி சுரேந்திரன் ( பெண்கள் அமைப்பு, )
8. திரு. சுதர்சன் சிவகுருநாதன் ( தேசியச் செயற்பாட்டாளர், )
9. திரு. அலன் ஆனந்தன் ( உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம், )
10. திரு. வல்லிபுரம் வைரமுத்து ( தேசியச் செயற்பாட்டாளர், )
11. திரு. சோமசுந்தரம் பிரபாகரன் ( மாவீரர் குடும்பம், )
12. திரு. கந்தசாமி கோபிநாத் ( தேசியச் செயற்பாட்டாளர்,)

இந் நிகழ்வு சார்ந்த வரவு செலவு கணக்கு விபரம் யாவும் வெளிப்படையானதாகவும், குறிப்பிட்ட நாட்களுக்குள் மக்களின் பார்வைக்கும் கொண்டுவரப்படும்.

எவற்றோடும் ஒப்பிட முடியாத அதியுயர் உன்னதமானவர்களை வணங்கும் இந் நாளை, வடுக்கள் ஏதும் இன்றி சிறப்புற செய்யவேண்டும் என்பதே முக்கிய நோக்காகும்.

எனவே எமது தமிழ் உறவுகள் அனைவரும் இந் நன்னாளில் உணர்வால் ஒன்றிணைந்து எம் மாவீரர் செல்வங்களை மனதில் இருத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் அதே வேளை தியாக தீபங்களின் ஒளியில் இன்றைய யதார்த்தங்களை உணர்ந்து எமது பாதையில் தொடர்ந்து அடுத்த அடிகளை வைப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். 


மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழு
பிரான்ஸ் - 2011

No comments:

Post a Comment