Translate

Thursday 14 July 2011

சீனா, ரஷ்யா உட்பட; உலக கம்யூனிஸ்டுகளிடம் ஈழத் தமிழருக்கு ஆதரவுதிரட்டுகிறது; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி


சீனா, ரஷ்யா உட்பட; உலக கம்யூனிஸ்டுகளிடம் ஈழத் தமிழருக்கு ஆதரவுதிரட்டுகிறது; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

சீனா, ரஷ்யா உட்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் விளக்கி, தமிழருக்கு ஆதரவு திரட்டும் பணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்துள்ளது. இதுவரை 49 நாடுகளுக்கு உண்மையை விளக்கி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கையில் நிகழ்த்தப்பட்டது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல. அது மனித குலத்துக்கு எதிரான போர் என்பதை உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு விளக்கி வருகிறோம் என்று உதயனுக்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்தார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் தா.பாண்டியன்.இலங்கையில் நடை பெற்ற போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை இந்தியாவில் உள்ள எல்லா மாநில மக்களுக்கும் விளக்கும் பணியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக கடந்த 8ஆம் திகதி இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தரும் தினம் என்று பிரகடனப்படுத்தி இந்தியா முழுவதும் நிகழ்வுகளை நடத்தியது கட்சி................ read more 

No comments:

Post a Comment