Translate

Saturday 29 October 2011

மாயன் என்னும் நம் தமிழர் இனம் ..

இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன்.

தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன. 



கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம்.

உலகில் பல்வேறு இனங்கள் வெற்றி வாகை சூடி வந்து உள்ளன. நீண்ட நாட்களாகவே நம்பபடும் விடயம் அட்லாண்டிஸ், லெமுரியா போன்ற கண்டங்களின் இருப்புகள். இவை இருந்தனவா என்கிற கேள்வியை பலர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Le Plongeon என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்களிடம் இருந்தே அறிவு பெற்றனர் என்கிற கருத்தை முன் வைக்கிறார்.

இந்த மயன்களின் தோற்றம் பற்றி ஆய்வு செயப்பவர்கள் பலரும் இவர்கள் தமிழர்களாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிகின்றனர்.

தமிழ் திரு ஆலயங்களின் வடிவிலேயே பிரமிடுகள் என்னும் எகிப்திய கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பலாம். கோயில் என்பது அரசனின் வீடு என்னும் பொருள் படும். அரசர்கள் இறந்தபின்னும் வாழும் வீடுதான் பிரமிடுகள். மயன்களின் பிரமிடுகளும் இதில் தமிழ் கட்டிட கலை என்கிறார்கள். தமிழக கோயில்களின் வடிவமும் குறிப்பாக தஞ்சை கோயில் வடிவமும் பிரமிடுகளும் ஒத்த வடிவம் கொண்டு உள்ளன.

தமிழ் மண்ணில் இருந்த நாகர்களில் சிலரே தமிழ் மண்ணை விட்டு வெளியேறிய மாயன்கள் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.
மாயன் என்பவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள். இவர்கள் அறிவீர் சிறந்தவர்கள். இவர்கள் தென் இந்தியர்கள் அல்லது ஈழத்தவர்கள். மாயன் என்கிற கட்டமைப்பளர்கள் கட்டிய நகரமே பொன் இலங்கை என்கிறது பண்டைய ராமாயணம்.

அசுர வழிபாடு செய்யும் மக்களும் இவர்களின் தாய் மண்ணில் வாழ்ந்தாதாக சொல்லபடுகிறது. நாகர் , நகார், நகர் என்கிற வார்த்தைகளில் நான் ஒரு ஒற்றுமையை காண்கிறேன்.

நகார் என்பது மாளிகை கட்ட பயன்படும் ஒரு பொருள். நாகர் என்பவர்கள் தமிழர்கள். நகர் என்பது மாளிகை அமைந்த பகுதி. நகரம் அமைப்பவர்கள் மாயன்கள். ( தலை சுத்துதா ? ). நாகர்கள் என்பவர்கள் நகர் அமைத்து வாழ்ந்தவர்கள்.

இந்த மாயன்கள் ஒரு நிலையில் தங்கள் கடல் வழி பயணத்தில் அடைந்த இடம்தான் - மெக்ஸிகோ அல்லது கௌதமால. இது தற்போதைய தென் மற்றும் நடு அமெரிக்க மண்.

இன்றும் இலங்கையில் உள்ள பெயர்கள் மேசிகோவில் உள்ளது என்கிறார்கள். இலங்கை என்பதே பல மெக்ஸிகோ நகர்களின் பெயர்களில் உள்ளதாம். பால் இலங்கை, சிவ இலங்கை என்று நிறைய சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். சிலோன் என்பது கூட சிவலங்கை என்பதின் திரிபோ என்னவோ.

மேலும் மாயன்களின் நாட்காட்டி கணித முறை தமிழர்களின் திருகனித பஞ்சாங்கம் போல் உள்ளதாம். பஞ்சாங்கம் என்பது தமிழ் வார்த்தை போல் தெரிகிறது. பஞ்சம் என்பதை தமிழ் கொண்டு விளங்க வேண்டும் என்றால் - தமிழில் நான்கு தினைகளே ஆரம்பத்தில் இருந்ததாம். 

இந்த நான்கு திணைகளில் பஞ்சம் ( ஐந்தாம் நிலை ) ஏற்பட்டால் அது பாலை ஆகுமாம். அதாவது பஞ்சம் உள்ள பகுதி ஆகுமாம். ஐந்தாம் பகுதி பஞ்ச பகுதி.

நிரம்பவே என் சரக்கும் இருந்தாலும் - மாயன்கள் தமிழர்கள், அப்போகாளிப்டோவில் காட்டப்படும் பழங்குடியினர் தமிழர்கள்.
அழிக்கப்பட்ட அமெரிக்க பழங்குடியினர் தமிழர்கள். ஆஸ்திரேலியா நாட்டின் பூர்வ குடிகளும் தமிழர்கள் என்று ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.

மொத்தத்தில் கதை இதுதான் தமிழன் அழிந்து கொண்டே உள்ளான்.

ஆப்பிள் இபோனில் பயன்படுத்தப்படும் குறுக்குவழி ( short cut நு அதானேங்க ? ) யாவும் மாயன் குறி சித்திரங்கள் போல் உள்ளதாம்.
கதிரவனை ஆதி தெய்வமாக கொண்டவர்கள் மாயன்கள். அதி-தேய்த்தவன் - அதிதியன் - அதித்ய என்பவை கதிரவனே. திருக்குறள் அதி பகலன் முதற்றே உலகு என்கிறாராம். அகர ( ஆல்பா ) முதல எழுத்து எல்லாம் - எனபது உலகின் பெரும்பான்மையான மொழிகளுக்கும் பொருத்தும்.

அடுத்த பெரும் வெற்றியாக இவர்கள் வாழ்ந்த நாட்டின் வருங்காலதியவர்கள் வெல்வார்கள். அவர்கள் பிரேசில் நாட்டவர்கள் ஆவார்கள் என்று ஆருடம் உள்ளதாம். பிரேசில் தற்போது பொருளாதார ஆற்றலாக ஆகி வருவது இன்னும் புருவம் உய
ர்த்துகிறது......












முத்தமிழ்
சென்னை

1 comment:

  1. You hav copied this from my blog.
    http://konjamalasalkonjamkirukkal.blogspot.in/2010/07/2012.html.

    I am happy as the news is getting spread. It would have been better if you have notified me.

    ReplyDelete