Translate

Tuesday, 29 November 2011

வடக்கில் அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழிப் பயிற்சி _


  வட மாகாணத்தின் 100 அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான செயலமர்வு ஒன்று டிசம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வட மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி திணைக்களத்தில் நடத்தப்படவுள்ளது.


இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனம் ஆரம்பித்துள்ள 10 நாட்கள் மொழிப் பயிற்சி வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுகின்ற தமிழ் மொழிமூல அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்க திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெற்கில் அரச ஊழியர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கவும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்கவும் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்படுகின்றது. 
___

No comments:

Post a Comment