Translate

Tuesday 21 February 2012

ஸ்ரீலங்கா கொடுக்கும் ஒன்று கூடல் விருந்தை புறக்கணிக்க ஆபிரிக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு!

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நாளை மறுதினம் ஜெனிவாவில் இலங்கை அரசு ஒழுங்கு செய்துள்ள விசேட ஒன்றுகூடல் நிகழ்வை முக்கியமான பல நாடுகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெனிவா மாநாட்டிற்கான இலங்கைக் குழுவின் முக்கிய பிரதிநிதியான வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளார்.
ஜெனிவாவில் ஆரம்பமாகும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. அமர்வுத் தொடரில் கலந்து கொள்ளும் இராஜதந்திரிகளைச் சந்திப்பதற்கான விசேட ஒன்று கூடலிலும் அமைச்சர் பீரிஸ் கலந்துகொண்டு இலங்கைக்கான ஆதரவைத் திரட்டவுள்ளார்.
எவ்வாறாயினும், லத்தீன் அமெரிக்காவின் சில நாடுகளும், ஆபிரிக்க நாடுகள் சிலவும் இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ளாதிருக்கத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, ஜெனிவா மாநாட்டில் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்த நாடுகள் ஆதரிக்கவுள்ள காரணத்தினால், சிறிலங்கா ஜெனிவாவில் நடத்தும் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளாதிருக்கத் தீர்மானித்துள்ளன என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக ஜெனிவா மாநாட்டில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம் தொடர்பில் நடுநிலையான கொள்கையை வகிப்பதற்கு ஆசியாவின் சில நாடுகள் தீர்மானித்துள்ளன. எனினும் இந்தியா இதுவிடயத்தில் இலங்கைக்குச் சார்பாக செயற்படுமென்றும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment