Translate

Monday, 6 February 2012

ஏன் இவரை போய் பாராட்டுறேன்னு கேக்குறீயளா?



கஞ்சா கருப்பு – பாலா கண்டெடுத்த முத்து. ஏன் இவரை போய் பாராட்டுறேன்னு கேக்குறீயளா? சத்தமில்லாம அவர் செஞ்ச ஒரு நல்ல காரியத்துக்காக தான்.

அவரும் அவரது மனைவி சங்கீதாவும் இணைந்து சில மன நலம் குன்றிய குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களின் படிப்பு செலவை ஏற்று இருக்கிறார்கள். திருச்சி அருகே உள்ள மனநலம் குன்றியோர் பள்ளிக்கு சென்று அங்கு பயின்று வரும் மாணவர்கள் பத்து பேரின் பராமரிப்பு செலவினை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறினர். அதன்படி மாதம் தோறும் ஒரு மாணவருக்கு ரூ.3000 வீதம் பத்து மாணவர்களுக்கு ரூ.30,000 வழங்க முடிவு செய்துள்ளனர். இதேபோல் மற்றவர்களும் இதுமாதிரியான தெய்வக் குழந்தைகளை தத்து எடுத்தால் நல்லது என இருவரும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அடுத்த முதல்வர் ஆவதற்காக தயாரிப்பாளர் செலவுல உதவிகள் செய்துட்டு தானே செய்த மாதிரி தம்பட்டம் அடித்து, போஸ் குடுக்கும் நாயகர்களை விட இவர் எவ்வளவோ மேல்தானே?

No comments:

Post a Comment