Translate

Thursday 8 March 2012

மயானத்தை புனரமைக்க சரா எம்.பி. நிதியுதவி



newsநீண்டகாலமாக அடிப்படை வசதிகள் இன்றியும் புனரமைக்கப்படாமலும் இருந்த பொன்னாலை பெரியவர் மயானத்தை புனரமைப்பதற்கான நிதியுதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வழங்கவுள்ளார்.




குறித்த மயானத்தை புனரமைத்துத் தருமாறு அந்தப் பகுதி மக்கள் பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்திருந்த போதும் இதுவரை அது நிறைவேற்றப்படவே இல்லை. இந்த நிலையில் தொல்புரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சுப்பர் பஞ்சாட்சரத்துடன் குறித்த மயானத்துக்கு நேற்றுச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன். இதன்போதே குறித்த மயானத்தை புனரமைப்பதற்கான நிதியுதவியை வழங்குவதாக அவர் உறுதியளித்தார். 

No comments:

Post a Comment