Translate

Monday 26 March 2012

கருணாநிதி ஒரு சுத்துமாத்துப் பேர்வழி! அமைச்சர் கருணா ஆவேசம்

கருணாநிதி ஒரு சுத்துமாத்துப் பேர்வழி!  அமைச்சர் கருணா ஆவேசம்
அரசியலில் கருணாநிதி ஒரு சுத்துமாத்துப் பேர்வழி என்று தெரிவித்து உள்ளார் இலங்கையின் மீள்குடியேற்றத் துறைப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன். தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அவரின் இனம் புரியாத விருப்பம் ஊடகங்களுக்கு தெரிவித்து இருந்தார் கருணாநிதி.

இது குறித்து கருத்துக் கூறியபோதே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறி உள்ளார்.



இவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் அரசியலில் நிலைத்து நிற்கின்றமைக்காக கருணாநிதி தமிழ் மக்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகின்றார், கருணாநிதி உட்பட தமிழ் நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகள் சுத்துமாத்துப் பேர்வழிகள்.

இவர்களுக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடையாது, தமிழீழம் என்பது நிராகரிக்கப்பட்ட கொள்கை, இக்கொள்கையை முன்னிறுத்தி மக்களை தூண்டி விடுகின்றார்கள், இதன் மூலம் அரசியலில் நிலைத்து நிற்க வழி தேடுகின்றார்கள் என்றார்.

No comments:

Post a Comment