Translate

Saturday 17 March 2012

சிறுமி மீது பாலியல் வல்லுறவு சந்தேகத்தில் பௌத்த பிக்கு கைது _

  சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை குருணாகல் பொலிஸார் நேற்றுக் காலை கைது செய்துள்ள்னர்.

குருணாகல் ரிதிகம என்ற கிராமத்தைச் சேர்ந்த பெற்றோரின் முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் குறிப்பிட்ட விகாரை ஒன்றின் பௌத்த பிக்கு ஒருவரைக் கைது செய்துள்ளனர்.



42 வயதுடைய இப் பௌத்த பிக்கு தமது சிறு வயது மகளை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தனர். பொலிஸார் அச் சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் குறிப்பிட்ட பௌத்த பிக்குவை கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசாரணையின் போது பௌத்த பிக்கு ஏற்கனவே இரு சிறுமிகளை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளமை தெரிய வந்துள்ள

No comments:

Post a Comment