Translate

Monday 23 April 2012

விடுதலைப்புலிகளுக்கு உதவினால் மரணம் நிச்சயம்!


விடுதலைப்புலிகளுக்கு உதவினால் அனைவரும் வெட்டப்பட்டு வீதிகளில் வீசப்படுவீர்கள் என கொழும்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் தமிழர்களை எச்சரித்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் இது குறித்து கூறப்படுவதாவது,


கொழும்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த 21 பேர் கொண்ட குழுவினர் திரிகோணமலையில் உள்ள ராணுவத்தினர், கடற்படையினர், காவல் துறையின் உதவியுடன் குச்சவெளிக் கிராமத்திற்கு சென்று அந்த கிராமத்தைச் சேர்ந்த 11 இளைஞர்களை தனித்தனியாக அழைத்துத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.


விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் அவர்களுக்கு உதவி செய்ததாகத் தெரிவித்தே அந்த இளைஞர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அவர்களிடம் இனிவருங்காலங்களில் விடுதலைப்புலிகளுக்கு உதவி புரிந்தால் ஒவ்வொருவரும் வெட்டப்பட்டு வீதிகளில் வீசப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளது கொழும்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவு.


அப்போது அந்த இளைஞர்கள் விடுதலைப்புலிகளை அழித்ததாக ராணுவமும் அரசும் தெரிவித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கு பதிலளித்த கொழும்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் விடுதலைப்புலிகள் திரும்பவும் வந்தால் அவர்களுக்கு உதவி புரியக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment