Translate

Saturday 5 May 2012

லண்டனில் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களின் கூட்டு வெளிப்பாடு!"முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பேரிணைவு"



பிரித்தானியாவில் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களின் கூட்டு ஏற்பாட்டில்"முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பேரிணைவு" நிகழ்வு எதிர்வரும் மே 18 ஆம் நாள் நடைபெறவுள்ளது.

லண்டன்  SKLPC (UK),  West End Road, Northolt, Middlesex, UB5 6RE எனும் முகவரியில் அமைந்துள்ள "முருகதாசன் நினைவுத் திடலில்" எதிர்வரும் 18.05.2012 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 8:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த "நினைவுவணக்க பேரிணைவில்" முள்ளிவாய்க்காலில் மரணித்த எம் தாயக உறவுகளையும் நினைந்து அஞ்சலிக்கவும், அவர்கள் நினைவில் சங்கமிக்கவும் ஒன்றுகூடி வருமாறு பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழ் மக்களையும் இவ் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


சிங்களப் பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தாயக உறுவுகளை நினைவுகொள்ளும் இந்த நிகழ்வை பிரித்தானியாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அக்ட் நவ் அமைப்பு, பிரித்தானியத் தமிழர் ஒன்றியம், நீதிக்கும் சமாதானத்துக்குமான பரப்புரை அமைப்பு, பிரித்தானியத் தமிழர் விளையாட்டுக் கழகங்கள், பிரித்தானியத் தமிழ்ப் பாடசாலைகள், பிரித்தானியத் தமிழர் மதவழிபாட்டுத் தலங்கள், பிரித்தானியத் தமிழர் நிலையம் போன்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து பெரு நிகழ்வாக ஏற்பாடுசெய்துள்ளனர். 

உயிர்களாய் இருந்த எம் உறவுகளை உடல்களாய் குருதியில் இட்ட சிங்கள பேரினவாதத்தின் முகமூடியை கிழித்தெறிவோம். தமிழத் தாயகத்தில் தொடரும் இனப்படுகொலையை சர்வதேசத்திற்கு சத்தமிட்டுச் சொல்வோம். 

உறவுகளே உறங்கியது போதும் உணர்வுடன் எழுந்திடு!  
மண்ணுறங்கும் உண்மைகளை  உலகறியச் செய்து ஈழ விடுதலைக்கு தோழ்கொடுத்து மரணித்த மக்களின் குருதிக்கு பதில் தேடு!  
நஞ்சையும், குண்டையும் கொண்டு நடந்திட்ட கொள்கைவீரராம் மாவீரர் இலட்சியத்தை நனவாக்க நடை போடு!

தொடர்புகட்கு: 
07877204123
07404761948
07956903978
07929349302
07970455445

No comments:

Post a Comment