Translate

Saturday 12 May 2012

சிங்கள குடியேற்றங்களை துரிதப்படுத்தவே வவுனியாவுக்கு சிங்கள அரசாங்க அதிபர்- சிவசக்தி ஆனந்தன்!


மன்னார் மாவட்டத்திற்கு சிங்கள அரசாங்க அதிபரை நியமித்து அங்கு சிங்கள குடியேற்றத்தையும், புத்த விகாரைகளையும் அமைத்து வருவதை போல வவுனியாவையும் சிங்கள மயமாக்குவதற்கே சிங்கள அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார் என வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


வவுனியாவிற்கு காலி அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதையும் ஏனைய அரசாங்க அதிபர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பட்டிருப்பதையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment