Translate

Tuesday 29 May 2012

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயார்!

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர விரும்புவதாக சுரேஸ் பிரேமசந்திரன் சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:


அரசாங்கத்துடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் இடை நடுவில் கைவிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு விரும்பிய போதிலும், சில விடயங்கள் குறித்து தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. என்றார்.அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர விரும்புவதாக சுரேஸ் பிரேமசந்திரன் சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:

அரசாங்கத்துடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் இடை நடுவில் கைவிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு விரும்பிய போதிலும், சில விடயங்கள் குறித்து தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. என்றார்.

No comments:

Post a Comment