Translate

Saturday 5 May 2012

தனக்குத்தானே தீ மூட்டிய முன்னாள் மூத்த பெண் போராளி


 படையினரின் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவர் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வடமராட்சி பொலிகண்டி பாலாவி பிரதேசத்தில் வசித்துவந்த 38 வயதுடைய சிவலிங்கம் சுகந்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளியாக இருந்த இவர் 1999ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளாகி, இடுப்பின் கீழ் செயலிழந்த நிலையில் வசித்துவந்தார்.

அத்துடன், 2009ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட இவர் மே 17ஆம் திகதி படையினரால் கைது செய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டவராவார்.
பொலிகண்டி பாலாவிப் பகுதியில் உள்ள மீள் குடியேற்ற மக்களுக்கான முகாம் ஒன்றில் தனது பெற்றோருடன் இவர் வாழ்ந்து வந்த இவர், நேற்றைய தினம் வீட்டின் அறையை பூட்டிக் கொண்ட பின்னர் தனக்குத் தானே மண்ணெண்னெய் ஊற்றி தீ மூட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த நபரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment