Translate

Tuesday 29 May 2012

தனி ஈழ கோரிக்கையுடன் கருணாநிதி டெல்லியின் உண்ணாவிரதம் இருப்பாரா?


தனி ஈழ கோரிக்கையுடன் கருணாநிதி டெல்லியின் உண்ணாவிரதம் இருப்பாரா?தமிழீழம் பற்றி பேசிவரும் திமுக தலைவர் கருணாநிதி முடிந்தால் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் உண்ணாவிரதமிருக்கட்டும் பார்க்கலாம் என பாமக நிறுவனர் டாக்டர் ரமாதாஸ் சவால் விடுத்துள்ளார்.
 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்கருணாநிதி எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தமிழ் ஈழத்தை பற்றி பேசுவார். 18 எம்.பிக்களை வைத்துள்ள கருணாநிதி துணிச்சல் இருந்தால் டெல்லிக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கட்டும் என தெரிவித்தார். 

இலங்கை மக்களின் அவலத்தை முன்வைத்து தமிழ் நாட்டில் அரசியல் நாடகம் நடத்தும் வைகோசீமான்பழ.நெடுமாறன் ஆகியோரை விஞ்சும் வகையில் ஈழம் கிடைத்த பின்பே உயிர் துறக்கப்போவதாகக் கூறியுள்ள கருணாநிதியை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார் ராம்தாஸ்.

No comments:

Post a Comment