
இருப்பினும், மகிந்தரின் ஊடகப் பிரிவினர் நேற்றைய தினம் பிரித்தானியா வந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இவர்கள் லண்டனில் ஹைப்பார்க்கில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்துக்குச் சென்றுள்ளனர். பிரித்தானியாவுக்கு மகிந்தர் வரும் தேதியை மற்றும் நேரத்தை மாற்றி மாற்றிச் சொல்லி, தமிழர்களை எவ்வாறு குழப்புவது. இதற்கு எந்த உடகங்களைப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக மந்திர ஆலோசனைகளும் நடத்தப்பட்டுள்ளது. போனமுறை போல மகிந்தரின் நிகழ்சித்திட்டத்தை வெளியிடாமல் பாதுகாக்குமாறு கம்சா இவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளாராம். இதனை அடுத்து இவர்கள் தற்போது செயல்பாட்டில் இறங்கியுள்ளனர்.
பிரித்தானியாவில் இயங்கிவரும் PR(public Relations) கம்பெனியான பெல்-பொட்டிங் உதவியும் நாடப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் மேலும்
அறிகிறது.
No comments:
Post a Comment